அவசரப்பட்டு வார்த்தையை விட்டால் ஆப்பு நிச்சயம்! | Rishabam March Month Rasi Palan 2023 in Tamil
Updated:
மார்ச் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷம் ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 11 ஆம் இடமான லாப ஸ்தானமான கும்பத்தில் சூரியன், புதன் மற்றும் சனி, 12 ஆம் இடமான மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் மார்ச் 13 ஆம் தேதி சுக்கிரன் பகவான் மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதே 13 ஆம் தேதி செவ்வாய் பகவான் ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், மார்ச் 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மார்ச் 17 ஆம் தேதி புதன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இதனால், மார்ச் மாதத்தில் ரிஷப ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
ஜென்ம ராசியில் செவ்வாய் இருப்பதால், உடல் உஷ்ணம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். பொறுமையின் மறுஉருவமாக ரிஷப ராசியினருக்கு இந்த மாதம் அப்படியே எதிர்மறையாக இருக்கும். அதாவது பொறுமையை சோதிக்கும் விதமாக பல செயல்கள் நடக்கும். யாரிடமும் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம். வார்த்தையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்க்கவும்.
6ம் இடத்தில் கேது இருப்பதால், கடன் தொல்லையால் மாட்டிக்கொண்டிருந்த ரிஷப ராசியினருக்கு கடனை திருப்பி செலுத்தும் அளவிற்கு சூழல் ஏற்படும். தீராத வழக்கு சார்ந்த பிரச்சனைகள் சாதகமான பலனை கொடுக்கும். 10ம் இடத்தில் சனி இருப்பதால், சொந்த தொழில் செய்வோருக்கு அமோக வளர்ச்சி ஏற்படும். விவசாயம் சார்ந்த தொழில் செய்வோருக்கு வருமானம் ஈட்டும் மாதமாக இருக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் கிடைக்காமல் தவித்த ரிஷப ராசியினருக்கு இந்த மாதம் குழந்தை பாக்கியம் உண்டு. மார்ச் 13 ஆம் தேதிக்கு பிறகு நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும்.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த வேலைவாய்ப்பு கிடைக்கும். தடைபட்டு நின்ற காரியங்கள் அனைத்தும் கைகூடும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு திறமையை வெளிகாட்ட வாய்ப்புகள் கிடைக்கும். பிரிந்த காதலர்கள் ஒன்று சேர்வார்கள். ஆசைகள் நிறைவேறும். ஒருசிலருக்கு வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். இருந்தாலும், பணவிஷயத்தில் மற்றவர்களை நம்புவதை தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டம நாள்: 15.03.2023 காலை 07.33 முதல் 16.03.2023 காலை 10.48 வரை
பரிகாரம்: காமாட்சி அம்மன் வழிபாடு நல்ல பலன்களை கொடுக்கும்.