பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் கோபி 'சதீஷ்'.. இதுதான் காரணமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.. | Baakiyalakshmi Gopi
Updated:
விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக பட்டைய கிளப்பி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். பெண் என்பவள் அடிமையாக தான் இருக்க வேண்டுமா என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியல் இந்தளவிற்கு டாப் ஹிட் அடிக்க பாக்கியா ஒருபுறம் இருந்தாலும், அதில் இன்னொரு புறம் கோபி கதாப்பாத்திரம் தான் என்றே சொல்லலாம்.
தனது பக்காவான நடிப்பால் கோபி என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தவர் சதீஷ். இவரை அந்த ரோலில் நடிப்பதற்காக மொத்த ரசிகர்களும் திட்டி வந்தார்கள். ஒரு கணவனாக அவர் தப்பு செய்திருந்தாலும், ஒரு தந்தையாக நல்லவராகவே நடித்துவருகிறார்.
தற்போது கோபி, ராதிகாவும் அவருடைய வீட்டுக்கே வந்து இருப்பது போன்று கதை நகர்ந்து வருகிறது. இதற்கு அப்பறம் என்ன நடக்குமோ, பாக்கியா வீட்டை விட்டு வெளியேறிவிடுவாரா என பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேலையில், ஒரு ஷாக்கிங் நியூஸ் வெளியாகியுள்ளது.
அதாவது, கோபி (சதீஷ்) தான் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்து இருக்கிறார். இந்த முடிவை எடுக்க பல காரணங்கள் இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கும் அவர், சொந்த காரணங்களுக்காக விலகுவதாக தெரிவித்து இருக்கிறார். இதை அவரே கண்கலங்கியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த நியூஸ் ஒட்டுமொத்த பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை இவர் விலகினால் அவருக்கு பதில் வேறொருவரை கொண்டுவந்து நடிக்க வைக்கத் தான் போகிறார்கள். இருந்தாலும் இவருடைய இடத்தை நிரப்புவது என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயமாக தான் இருக்கிறது.