பிரபல சீரியல் நடிகர் தற்கொலை.. அதிர்ச்சியில் சின்னத்திரை உலகம்!!
Updated:
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் தற்கொலை செய்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படிப்புக்கு தடை போடும் தந்தையை மீறி ஒரு பெண் எப்படி படித்து பட்டதாரி ஆகிறார் என்ற கதையை வைத்து மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி. இதில் கதாநாகியுடன் கல்லூரியில் படிக்கும் சக மாணவர் கேரக்டரில் ஹரி என்பவர் நடித்து வந்தார்.
இந்நிலையில், ஹரி சென்னையில் உள்ள தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹரியின் மரணத்தால் காற்றுக்கென்ன வேலி சீரியல் குழுவினர் சோகத்தில் உள்ளனர்.
Show comments