மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. அதிக பாதிப்பு இந்த இடத்தில் தான்..
Updated:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. கடந்த 19 ஆம் தேதி ஒரே நாளில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. ஆனால், மறுநாள் 918 ஆகவும், நேற்று 646 ஆகவும் பாதிப்பு குறைந்த நிலையில், மீண்டும் இன்று மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி (காலை 8 மணி வரை) நேரத்தில் புதிதாக 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக,
மகாராஷ்டிரா - 280 பேர்
குஜராத் - 176 பேர்
கேரளா - 113 பேர்
கர்நாடகா - 113 பேர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 98 ஆயிரத்து 118 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பால் நேற்று மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், கேரளா, சத்தீஷ்கரில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,813 ஆக உயர்ந்துள்ளது.