செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி..!

சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி மேகலா நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தனர். பின்பு செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்து, வழக்கை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Show comments

தொடர்பான செய்திகள்

ஆளுநர் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் பொன்முடி!.

மணிப்பூர் விவகாரத்தில் மோசமான வீடியோ வெளிவந்துள்ளதால் பிரதமர் வாய் திறந்து உள்ளார்..! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி!.

அமைச்சர் வீட்டில் ஏன் ரெய்டு: வெளியான தகவல்..!.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாகத்துறையினர் சோதனை .