தங்கத்தை விட தக்காளி விலை அதிகமா இருக்கே...ஒரு கிலோ 200 ரூபாயாம்!

சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.200/- என்பதால் மக்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

விலை வாசி அதிகரித்து வரும் நிலையில் தங்கம் வாங்க தான் மக்கள் அச்சப்படும் சூழலை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் இப்போது தினசரி சமையலுக்கு அத்தியாவிசியமாக இருக்கும் காய் கறியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை பயங்கர உச்சத்தில் இருக்கிறது. கடந்த வாரம் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.150/- விற்கப்பட்டுள்ளது.

ஆனால் அடுத்த ஒரு சில நாட்களில் தக்காளி விலை குறைந்து கிலோ ரூ.80/-க்கு விற்பனையாகியுள்ளது. இந்நிலையில் இன்று யாருமே எதிர்பாராத விதமாக சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை அதிகபட்சமாக ரூ.200/-க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொது மக்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தப்பட்டு உள்ளனர். இப்படியே போனால் காய் கறி பொருட்களை வாங்கி சாப்பிட கூட முடியாது என்று மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இந்த விலை ஏற்றம் எப்போது தான் குறையும் என்று ஏக்கத்துடன் இருக்கின்றனர் பொது மக்கள்.

Show comments

தொடர்பான செய்திகள்

இந்திய விடுதலைக்காக போராடிய தமிழக விடுதலை போராட்ட வீரர்கள் பெயர்கள்.. | Tamil Nadu Freedom Fighters Name List in Tamil.

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்கள்! | Freedom Fighters Names in Tamil.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவம்.. தமிழக அரசின் அருமையான திட்டம்.. | Nammai Kaakkum 48 Scheme Details in Tamil.

பக்தர்கள் அதிர்ச்சி...திருச்சி ஸ்ரீரங்கம் கோவில்...கோபுரம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு!.