போலீசார் அலட்சியம்.. கால்களை இழந்த இளைஞர்.. உ.பி.'யில் பயங்கரம்!!
Updated:
கான்பூரில் ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கையின்போது, 17 வயதான காய்கறி விற்கும் இளைஞன் நேற்று முன்தினம் மாலை தனது உடமைகளை இரயில் தண்டவாளத்தில் போலீஸ்காரர்களால் தூக்கி எறியப்பட்டதாகக் கூறப்படும் போது ரயிலில் அடிபட்டு வலது காலை இழந்தார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட காய்கறி விற்பனையாளர் அஸ்லானுக்கு அவரது இடது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கான்பூரில் உள்ள மருத்துவர்கள் அவரை சிகிச்சைக்காக லக்னோவுக்கு அனுப்பி வைத்தனர். அஸ்லானுக்கு சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் கழகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கான்பூர் உதவி காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) லக்கன் யாதவ் கூறுகையில், "முதற்கட்ட விசாரணையில், "காவல்துறை தலைமைக் காவலர் ராகேஷ் குமாரின் அலட்சிய நடத்தையால் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ராகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, இது குறித்து விரிவான விசாரணை நடத்த கல்யாண்பூர் வட்ட அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அஸ்லான் இந்திரா நகர் கிராசிங்கில் உள்ள ரயில் பாதைக்கு அருகில் காய்கறிகளை விற்கிறார்." என்றார்.
அஸ்லானின் அண்டை வீட்டாரான பின்டூ தாக்கூர் இது குறித்து கூறுகையில், "வெள்ளிக்கிழமை மாலை ரயில் பாதைக்கு அருகில் ஒரு ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை போலீசாரால் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அஸ்லான் காய்கறிகளை எடைபோட பயன்படுத்திய தராசை, ரெயில் பாதையில் போலீசார் வீசியதாக அந்த இடத்தில் இருந்தவர்கள் கூறினர். அஸ்லான் அதை மீட்டெடுக்க முயன்றபோது, அவர் விபத்தில் சிக்கினார்." என்று கூறினார்.
இதற்கிடையே நடந்த சம்பவத்தை முழுமையாக ஆராய, இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை யாராவது படம்பிடித்து வைத்திருந்தாள் வழங்குமாறு போலீசார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கம் சாக்கடையில் இருந்து கிடைக்குமா.... அதுவும் இந்தியாவிலா..? எங்க தெரியுமா..?