மேக்கப் போட்ட மணப்பெண்ணின் முகம் வீக்கம்! திருமணத்தை நிறுத்திய மணமகன்..
Updated:
மணப்பெண் ஒருவருக்கு மேக்கப் போட்ட பிறகு, அவரது முகம் கருமை அடைந்து முகம் வீங்கியதால், திருமணமே நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவை சேர்ந்த பெண் ஒருவருக்கும், வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயமாகி பேசி முடிக்கப்பட்டது. இந்நிலையில், அவர்களுக்கு நேற்று முன் தினம் நடக்க இருந்தது. இந்நிலையில், திருமணத்துக்கு சில தினங்களுக்கு முன்பாக மணப்பெண், அரிசிகெரேயில் உள்ள கங்கா என்பவரின் சொந்தமான அழகு நிலையத்திற்குச் சென்று மேக்கப் போட்டுள்ளார்.
ஆனால், திருமணத்துக்கு சில தினங்கள் இருப்பதால் மேக்கப் கலைந்து விட கூடாது என்பதற்காக வெந்நீரில் ஆவி பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்தப் பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியதுடன், முகம் வெந்து கொப்புளங்கள் வந்துள்ளது. கண்களும், கன்னமும் வீங்கி காணப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர்.
இந்நிலையில், மணப்பெண்ணின் முகம் மாறியதால், நேற்று முன்தினம் நடக்க இருந்த திருமணத்தை வாலிபர் நிறுத்தினார். இதனால், இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அழகு நிலைய உரிமையாளர் கங்கா மீது மணமகளின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேக்கப் போட்ட இளம்பெண்ணின் முகம் மாறியதால் திருமணமே நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.