தை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், 2 ஆம் இடமான ரிஷபத்தில் செவ்வாய் பகவான், 6 ஆம் இடமான கன்னியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது பகவான், 9 ஆம் இடமான தனுசில் புதன் பகவான், மகர ராசியில் சூரிய பகவான், கும்ப ராசியில் சுக்ரபகவான் மற்றும் சனி பகவான், கடைசி இடமான மீனத்தில் குருபகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும் இந்த மாதத்தில் முக்கிய கிரக பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது.
அதாவது, வருகின்ற தை மாதம் 3 ஆம் தேதி [ஜனவரி மாதம் 17] சனி பகவான் மகர வீட்டில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், தை 8 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், தை 24 ஆம் தேதி புதன் பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனி, சுக்கிரன், புதன் என மூன்று கிரகங்களின் பெயர்ச்சியாவதால் தை மாதத்தில் மேஷ ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
ராசி அதிபதியான செவ்வாய் பகவான் தன ஸ்தானத்தில் வலுப்பெற்று இருப்பதால், தடை, தாமதம், சண்டை, சச்சரவுகள் அனைத்தும் விலகும். அதேபோல், பண விஷயங்களில் இருந்து வந்த இழுபறி, நஷ்டம், கடன் அனைத்தும் நீங்கும். தந்தையின் மூலமாக அனுகூலப் பலன்களை பெறுவீர்கள். உங்க ராசிக்கு 10 ஆம் இடத்தில் சூரியன், சுக்ரன், சனி மூன்று கிரகங்களும் ஒரே இடத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சுக்ரன் 10 ஆம் இடத்தில் இருப்பதால் உங்க துணையின் மூலமாக வருமானம் அதிகரிக்கும்.
தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, மனை, வாகனம் வாங்கக்கூடிய பாக்கியம் உண்டாகும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகமும் உண்டு. அதேபோல், தள்ளிப்போன சுபகாரியங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். எதிர்ப்பார்த்த இடத்தில் பண உதவி கிடைக்கும். பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானம் வலுப்பெறுவதால், நீண்ட நாட்களாக தடைபட்ட குலதெய்வ வழிபாடு, இந்த தை மாதத்தில் நிறைவேறும். குருபார்வையும் உங்க ராசியில் விழுவதால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்தைவிட லாபம் இருமடங்காக இருக்கும். அரசு வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
இருப்பினும், உத்தியோகத்தில் இருப்பவர்கள் சகஊழியர்களிடம் தேவையில்லாத வாதங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தை பாக்கியம் எதிர்பார்த்த மேஷ ராசிக்காரர்களுக்கு ஜனவரி 24 க்கு பிறகு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்கெடுத்தாலும் கோபப்படுவதை குறைத்துக்கொள்வதன் மூலம் தேவையில்லாத சிக்கல்களில் இருந்து தப்பிக்கலாம். வார்த்தையில் கவனம் தேவை.
பரிகாரம்: தை மாதத்தில் உள்ள 5 செவ்வாய் கிழமைகளிலும் நவகிரக சன்னிதானத்தில் உள்ள செவ்வாய் பகவானுக்கு நாட்டு செக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, 9 முறை வலம் வரவேண்டும். அல்லது வீட்டில் முருகபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் போடலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…