Post Office Recruitment 2022 Apply Online Last Date: தமிழ்நாடு தபால் துறை வட்டாரத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, தபால் துறையில் மொத்தம் 4,310 காலியிடங்கள் உள்ளன. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் பதவியின் இன்னும் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
முக்கிய விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் |
India Postal Department |
பணியின் பெயர் |
Branch Post Masters, Assistant Branch Post Masters (ABPM), Dak Sevak |
காலிப்பணியிடங்கள் |
4,310 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் |
பணி விவரம்
கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறை |
காலிப்பணியிடங்கள் |
Branch Post Masters, Assistant Branch Post Masters (ABPM), Dak Sevak |
4,310 |
ஊதியத்தொகை
இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (Post Office Recruitment 2022 Apply Online Last Date).
துறை |
ஊதியத்தொகை / மாதம் |
Branch Post Masters |
ரூ. 12,000 |
Assistant Branch Post Masters (ABPM) |
ரூ. 10,000 |
Dak Sevak |
ரூ. 10,000 |
கல்வித்தகுதி
இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், மேற்கூறப்பட்ட துறைகளுக்கு ஏற்றவாறு கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
துறை |
கல்வித்தகுதி |
Branch Post Masters |
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தபால் நிலைய பொறுப்பாளராக அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதாவது, பொதுமக்களுக்கு அஞ்சல் துறை, சேவைகளை வழங்குதல், அறிக்கைகளைக் கையாள்வது, பணப் பரிவர்த்தனை போன்ற பணிகளை மேற்கொள்பவராக இருக்க வேண்டும். |
Assistant Branch Post Masters (ABPM) |
இந்தப் பதவிக்கு, விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அடிப்படை கணினி பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், தபால் நிலைய பொருள்களை விற்பனை செய்தல், வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே சென்று தபால்களை புக்கிங் செய்தல், மற்றும் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றைச் செய்பவராக இருக்க வேண்டும். |
Dak Sevak |
டாக் சேவாக் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதுடன் அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தபால் துறை பணிகளில் இருக்கும் போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி போஸ்ட் மாஸ்டர் போன்றோர்க்கு உதவு செய்பவராக இருக்க வேண்டும். மேலும், இதில் பங்கேற்கும் நபர்கள் பிளஸ் 2-வில் கணினி அறிவியலை ஒரு பாடமாக படித்திருந்தால், அவர்கள் தனியாக கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டியதில்லை. |
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 05.06.2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும் (Postal Department Latest News).
துறை |
வயது வரம்பு |
Branch Post Masters, Assistant Branch Post Masters (ABPM), Dak Sevak |
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரைக் கொண்டிருக்கலாம் |
தேர்வு செய்யப்படும் முறை
இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள், அவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்
மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் தலைமை தபால் நிலையம் மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்தலாம். விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் ரூ. 100 ஆகும். மேலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் ஆகியோர்க்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (Post Office Jobs in India).
இதில் பங்கேற்க நினைக்கும் நபர்கள் இந்திய தபால் துறையின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…