தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் அவர்களது இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் என உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
உயர்கல்வித்துறை தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது. அதன் படி, தமிழகத்தில் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ படிப்புகளில், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தமிழ் மொழி பாடம் கட்டாயம் குறித்து, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டதாவது: அன்னை தெரசா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் போன்ற மூன்று பல்கலைக் கழகங்களைத் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் B.Com., BBA., BCA கோர்ஸ்களில் இரண்டாம் ஆண்டில் தமிழ் மொழி பாடத்திட்ட தேர்வு இடம் பெறவில்லை.
எனவே, அனைத்து பல்கலைக்கழகங்களிலுமே ஒரே நடைமுறையை பின்பற்ற வேண்டும். இதனால், இந்த மூன்று பாடப்பிரிவுகளிலும், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடத்திட்ட தேர்வு இடம்பெற வேண்டும்.
இந்த பாடப்பிரிவுகளில் முதலாமாண்டு பாடத்தில் தமிழ் பாடத்தேர்வு இருக்கிறது. ஆனால், இரண்டாம் ஆண்டில் கிடையாது. தற்போது, அனைத்து பல்கலைக்கழங்களிலும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளிலும், தமிழ் பாடத்தேர்வு இருக்க வேண்டும்.
அது மட்டுமல்லாமல், இந்த புதிய முறையை நடப்பு கல்வியாண்டியாலேயே அமல்படுத்த வேண்டும் என்றும், அடுத்த செமஸ்டர் தேர்வு நடைபெறும் சமயத்தில் கட்டாயம் தமிழ் மொழி பாடத் தேர்வு இடம்பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…