சென்னையில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. கடலூர் பகுதியில் விவசாய பணிகள் நலிவுற்றதால், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனது இரண்டாவது மகளுடன் சென்னை திருவொற்றியூருக்கு குடிபெயர்ந்துள்ளனர். அங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கி பெற்றோர் கூலி வேலை செய்து வந்தனர்.
15 வயதான இரண்டாவது மகள், அங்குள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் சிறுமிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், மாணவியின் தாய் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவும், இது பிரசவ வலி என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த தாய் சிறுமியிடம் விசாரித்தபோது, அண்ணன் உறவுமுறை உள்ள சித்தியின் மகன் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த பகீர் விஷயத்தை தெரிவித்துள்ளார். பின்னர், மாணவி மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், சிறுமியின் வயது, கணவன் குறித்து மருத்துவ ஊழியர்கள் விவரங்களை கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த மறுத்தவமனை ஊழியர்கள் இதுகுறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் 19 வயதான உறவுமுறை அண்ணன் பாலியல் பலாத்காரம் செய்த விஷயம் தெரியவந்தது. இதையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள உறவுமுறை அண்ணனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…