Wed ,Oct 23, 2024

சென்செக்ஸ் 80,081.98
-138.74sensex(-0.17%)
நிஃப்டி24,435.50
-36.60sensex(-0.15%)
USD
81.57
Exclusive

இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு.. பழனியில் பரபரப்பு!!

Sekar October 30, 2022 & 14:58 [IST]
இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு.. பழனியில் பரபரப்பு!!Representative Image.

பழனியில் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன. 

அங்கு மோகன்ராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் ஒரு தோட்டத்தில் கும்பகோணத்தை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இருவரும் நேற்று இரவு தோட்டத்தில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டு, இருவரும் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது கார்த்தியின் நெஞ்சு பகுதியில் துப்பாக்கி பாய்ந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மோகன்ராஜ், கார்த்திக்கை மீட்டு உடனடியாக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கார்த்திக் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், வேட்டைக்காக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டபோது இது எதிர்பாராத விதமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்