Erode latest news : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி திருநங்கை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவைமாவட்டம் சிவானந்தா காலனியைச் சேர்ந்த சிங்க ராஜா என்கிற கெவினா திருநங்கை நேற்று 5 திருநங்கையுடன் பகுத்தம் பாளையம் பகுதியில் உள்ள தோழி ரேகானா வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவர்கள் அனைவரும் அருகே உள்ள பவானி ஆற்றில் குளிக்க சென்றனர். பவானி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் ஓடுகிறது.
இதனையடுத்து, கெவினா தனது நண்பர்களுடன் ஆனந்தமாக குளிக்கும் போது, எதிர்பாராதவிதமாக கெபினா ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்று தண்ணீரில் மூழ்கியுள்ளார். இந்நிலையில், அதிர்ச்சியடைந்த சக திருநங்கைகள் கூச்சலிட்டனர். இதனைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக கெவினா நீரில் மூழ்கினார்.
இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கெவினாவை மீட்க்க போராடினர். நீண்ட நேரத்திற்குப் பிறகு கெவினாவின் உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், கெவினாவின் உடலை பார்த்து சக திருநங்கைகள் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பவானி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் பவானி ஆற்றில் குளிப்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…