பிரபல தமிழ் டிவி சீரியல் நடிகை திவ்யா, கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேளடி கண்மணி மூலம் தமிழ் சீரியலில் நடிக்க ஆரம்பித்த திவ்யா மகராசி சீரியல் மூலம் பிரபலமடைந்தார். பின்னர் அதிலிருந்து விலகிய அவர் செவ்வந்தி எனும் சீரியலில் நடித்து வருகிறார். கேளடி கண்மணி தொடரில் உடன் நடித்த அர்னாவுடன் திவ்யாவுக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில், பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
மேலும் இருவரும் லிவ்-இன் உறவில் இருந்த நிலையில், சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அர்னாவ் தற்போது செல்லம்மா சீரியலில் நடித்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்த அந்த நடிகை தற்போது வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதில் தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தன்னை அடித்ததால், கர்ப்பம் கலையும் சூழலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…