Cine News : இயக்குநர் டி.ராஜேந்தர் நலம்பெற நடிகர் கூல் சுரேஷ் திருவண்ணாமலையில் பிரார்த்தனை செய்தார்.
டி.ராஜேந்தர் உடல் நிலை மோசம்
தமிழ் திரையுலகில் உள்ள முக்கிய இயக்குநர்களில் ஒருவரான டி.ராஜேந்தர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உயர் சிகிச்சை அளிக்க வெளிநாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிம்பு அறிவிப்பு
இந்நிலையில், டி ராஜேந்தர் வயிற்றில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதாக அவரது மகன் நடிகர் சிம்பு தெரிவித்தார்.
கூல் சுரேஷ் பிரார்த்தனை
இந்நிலையில், அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகரும் அவரது ஆதரவாளருமான காமெடி நடிகர் கூல் சுரேஷ் திருவண்ணாமலை கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்து எலுமிச்சை பழத்தில் நெய் விளக்கேற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…