தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே வெங்கடாச்சலப்புரத்தைச் சேர்ந்த பச்சை முத்துதான் ஜி பி முத்து. டிக்டாக் மூலம் பிரபலமான இவர் பிக்பாஸிலிருந்து பாதியில் வெளியேறினார். இதனால் இவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின் காரணம் தெரிந்து சமாதானம் ஆகினர். அதன் பிறகு இவர் பற்றிய பேச்சோ தகவலோ பெரிதாக இல்லை.
இந்நிலையில், தற்போது இவர் செய்திருக்கும் காரியம் இவரைப் பலரும் புகழ்ந்து பேச வைத்திருக்கிறது. என்ன மனுசன் பா இவரு.. அந்த மனசு இருக்கே.. என பலரும் பாராட்டி வருகின்றனர்.
மறைந்த தனது நண்பனின் நினைவு தினத்தை ஒட்டி அவரது புகைப்படத்துக்கு மாலை அணிவித்து படையல் இட்டு சாமி கும்பிட்டு வருகிறாராம். இந்த வீடியோவை அவரது குழுவில் இருக்கும் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் டிரெண்டிங்கில் ஜிபி முத்து.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…