தமிழ் சினிமாவில் புதிய புதிய படங்கள் வர வர புதிய புதிய நடிகைகளும் அறிமுகமாகிறார்கள். அவர்களில் ஒரு சிலரே அடுத்தடுத்து பல படங்கள் செய்கிறார்கள். சிலர் ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடித்துவிட்டு பின் மார்க்கெட் இழந்து செல்லும் நடிகைகள் பலர். ஆனால் நடித்த 2 படங்களிலும் மாஸ் மரண ஹிட் ஆகவே, நடிகையின் மார்க்கெட் வேற லெவலுக்கு எகிறியது.
பிரியங்கா அருள் மோகன் புதிய படங்களில் நடிப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக தெரிகிறது. இதுவரை குடும்பப்பாங்கான, ஒரு சில காட்சிகள் கொஞ்சம் லைட் கவர்ச்சி காண்பித்து வந்த பிரியங்கா அருள் மோகன், இனி கவர்ச்சி ரூட்டுக்கு மாறுவார் என கூறப்படுகிறது.
பிரியங்காவை இப்போது தங்கள் படங்களில் நடிக்க வைக்க முன்னணி கதாநாயகர்களும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். இதனால் டிமாண்ட் அதிகமாகி அவரின் சம்பளம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதுமட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருப்பதால் மார்க்கெட் விரிவடைந்துள்ள நிலையில், முன்னணி நடிகையாக மாறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் கவர்ச்சி என்பது நடிகைகள் கதைகளுக்கு அவசியமென்றால் கொடுப்பது தவறில்லை எனும்படியாக பேசியிருந்தார். இதனால் அம்மணி விரைவில் கவர்ச்சி ரூட்டுக்கு மாறுவார் என்றே கணிக்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…