குடியரசு தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நேற்று (ஜூலை 24, 2022) உடன் முடிவடைந்த நிலையில் புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த ஜூலை 18 அன்று நடந்தது. அதில் ஆளும் காட்சி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட திரவுபதி முர்மு தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த சின்ஹாவை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றார்
இந்நிலையில் இன்று நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றுள்ளார். இந்நிலையில் இந்தியாவின் குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரவுபதி முர்மு-விற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துளளார். மேலும் இந்தியாவும் சீனாவும் ஒன்றுக்கொன்று மிக முக்கியமான அண்டை நாடுகள் எனவும், இரண்டு நாட்டு உறவுகளுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…