பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளரான நூபுர் ஷர்மா, நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதற்காக சில இந்திய நகரங்களில் வன்முறைப் போராட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து சீனா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது.
சீன தொலைக்காட்சி சேனல் ஒன்றின் தினசரி செய்தியாளர் சந்திப்பின் போது, சீனாவின் வெளியுறவு அமைச்சகம் நிலைமை சரியாக தீர்த்துவைக்கப்படும் என்று நம்புவதாகக் கூறியது.
முகமது நபி பற்றி நூபுர் சர்மாவின் சமீபத்திய கருத்துகள் குறித்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பினிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வென்பின், "இது சம்பந்தமான அறிக்கைகளை நாங்கள் கவனித்துள்ளோம், மேலும் நிலைமை சரியாக தீர்க்கப்படும் என்று நம்புகிறோம். பல்வேறு நாகரிகங்களும் மதங்களும் ஒருவரையொருவர் மதித்து சமமாக வாழ வேண்டும் என்று சீனா எப்போதும் நம்புகிறது."
பெருமை மற்றும் தப்பெண்ணத்தை நிராகரிப்பது எப்போதும் முக்கியம், ஒருவரின் சொந்த நாகரிகத்திற்கும் பிற நாகரிகங்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை நன்கு புரிந்துகொள்வது மற்றும் நாகரிகங்களுக்கு இடையில் பரிமாற்றங்கள், உரையாடல் மற்றும் இணக்கமான சகவாழ்வை மேம்படுத்துதல் அவசியம்" என்று கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…