மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணை அங்கிருக்கும் பாதுகாவலர்கள் தாக்கியதாக அந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் தேவையாணி என்பவர் பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்டு குழந்தை பெற்றெடுத்தார். அப்போது மனைவியையும் குழ்நதையும் பார்க்க வந்த அவளின் கணவர் சூர்யாவை பாதுகாவலர்கள் பார்க்க விடவில்லை என்பதால் அவர்களை தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த பாதுகாவலர்கள் சிகிச்சையில் இருக்கும் தேவையாணியை கண்டபடி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பான உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…