மத்திய பிரதேச மாநிலம் ஷஜபூர் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி, அவரது கிராமத்தின் அருகே உள்ள மற்றொரு கிராமத்தில் இருக்கும் பள்ளியில் படித்துவருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளி சென்று திரும்பி கொண்டிருக்கையில் அண்டை கிராமத்தை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு கும்பல் இவரை வழி மறித்துள்ளது. அப்போது அந்த மாணவியிடம் "உங்களது சமூகத்தினர் பள்ளி சென்று படிக்கச் கூடாது" என கூறி மிரட்டியுள்ளனர். மேலும் உனது கிராமத்தில் இருக்கும் மற்ற சிறுமிகள் போல், நீயும் பள்ளி செல்லக்கூடாது என்று கறாராக தெரிவித்துள்ளனர்.
मध्यप्रदेश के शाजापुर में स्कूल जाने की बात को लेकर दबंगों का हमला pic.twitter.com/d6VnR0YaYw
— vikram Singh jat (@vikramsinghjat7) July 26, 2022
இதையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி இது குறித்து தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார், இதனால் கோபமடைந்த சிறுமியின் சகோதரர் அந்த கிராமத்திற்கு சென்று தட்டிக்கேட்டுள்ளார், அப்போது அந்த மாற்று சமூகத்தை சேர்ந்த நபர்கள் எங்களையே எதிர்த்து கேள்வி கேட்கிறாயா என கூறி சிறுமியின் சகோதரரையும், அவரது குடும்பத்தினரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது குறித்து அந்த மாணவி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார், அது வைரலானதை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்து தாக்குதல் சம்பவதி ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பலை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அந்த தாக்குதல் விடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…