தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வந்தது. இதனால் சென்னை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் குறைந்து வருவதால், ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாளை சனிக்கிழமை (பிப்ரவரி 04, 2023) அன்று அனைத்து வகைப் பள்ளிகளும் இயகும் எனவும், புதன்கிழமை பாடவேளையைப் பின்பற்றி முழு வேலை நாளாக செயல்படும் எனவும், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார்.
எனவே, சென்னையில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் புதன்கிழமை பாடத்திட்டத்தின் முறைப்படி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…