முன்னாள் மத்திய அமைச்சரும், இரண்டு முறை குஜராத் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்தவர் பரத்சிங் சோலங்கி. குஜராத் காங்கிரஸில் முக்கிய தலைவர்களில் ஒருவராக அறியப்படும் இவர், வேறு ஒரு பெண்ணுடன் தனிமையில் ஹோட்டல் அறையில் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரத்சிங் சோலங்கி ஹோட்டல் அறையில் தனி அறையில் இருப்பதை அவரது மனைவி ரேஷ்மா படேல் வீடியோ மூலம் உலகம் முழுவது தெரியவைத்துள்ளார். வைரலாக பரவும் அந்த வீடியோவில் பரத்சிங் சோலங்கியின் மனைவி ரேஷ்மா படேல் சிலருடன் ஹோட்டல் அறை ஒன்றில் நுழைகிறார், பின்னர் அந்த இளம் பெண்ணுடன் இருந்த பரத் சிங் சோலங்கியை ரேஷ்மாவும் அவருடன் சென்றவர்களும் தாக்கியிருக்கிறார்கள்.
இதை பாரத்சிங் சோலங்கி தடுக்க முயல்வதும் அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இருப்பினும் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தாக்கும் ரேஷ்மா படேல், 'நீ என் கணவருடன் இருக்கிறாய்... நான் உன்னை விடமாட்டேன்...' என்று கூறிக் கொண்டே ஆவேசமாகத் தாக்குகிறார். இந்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த வீடியோ அந்த கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…