சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி வருகை தந்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து அவரை விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்ற போது, நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தில் மூன்று அடைப்பு உள்ளதாகவும், பைபாஸ் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதையே இஎஸ்ஐ மருத்துவர்களும் பரிந்துரை செய்தனர்.
இதை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். பிற்பகலில் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி புதிய அமர்வுக்கு மாற்றம் செய்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி வருகை தந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி ரிமாண்ட் செய்ய வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…