ஆப்ரிக்க கண்டத்தில் செங்கடலையொட்டி உள்ளது எரித்திரியா நாடு, மிகவும் சிறிய நாடான இதில் அடிக்கடி உள்நாட்டு போர் நடந்துவருகிறது. மேலும் அண்டை நாடுகளுடனும் போரிட்டு வருகிறது.
தொடர்ந்து போரிட்டு வருவதால் அந்த நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதே நேரத்தில் ஆண்களின் எண்ணிக்கை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது, எனவே பெண்களுக்கு திருமணம் செய்வதற்கு போதிய ஆண்கள் கிடைக்கவில்லை. இதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே காலத்தை தள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதனை தடுக்கும் விதமாக அந்த நாட்டில் புதிதாக விசித்திர சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது, அதவாது ஆண்கள் அனைவரும் கட்டாயமாக 2 திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனவும், முடியாது என கூறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறியுள்ளனர். மேலும் 2க்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்தாலும் அது தவறில்லை என கூறியுள்ளது.
அதேபோல பெண்கள் இரண்டு திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கும் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த திட்டத்தால் அங்கு வசிக்கும் ஆண்கள் குஷி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…