இந்திய பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் பாஜக அரசுக்கு எதிர்க்கட்சிகள் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் விமர்சனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள நியாய விலைக்கடை உரிமையாளர்கள் சார்பில் இன்று டில்லியில், அரிகி, கோதுமை, உள்ளிட்ட சமையல் எண்ணெய் ஆகியவற்றிற்கான இழப்பீடு வழங்குவது குறித்த 9 கோரிக்கைகளை வலியுறித்தி ஜல் மந்தரின் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதனையடுத்து, இந்திய நியாய விலைக்கடை சங்கத்தின் துணை தலைவராகப் பதவி வசிக்கும் பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…