தமிழகத்தில் பிரபல அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் ஆகிய இருவரையும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோமாளி கூடாரத்திற்கு இல்லை அதிகாரம் எடப்பாடிக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், அது தொடர்பான அறிக்கையில், “என் அங்கீகாரம் நாடாளுமன்றத்தில் இரட்டை இலையை அங்கீகரித்து கிடைத்த ஒரே ஒரு வெற்றி. அது உண்மை தொண்டர்களின் உழைப்பால் கிடைத்த வெற்றி. கழக நிரந்தர பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு கொடுத்த வரம். அதை நீக்கவும் ஒதுக்கவும் கோமாளி கூடாரத்திற்கு அதிகாரம் இல்லை.
கொள்ளைப்புற வழி வந்தவர்களுக்கு கொள்கை விலகி சென்றது வெகுதூரம். பதவி கொடுத்தவர்களுக்கே பாதகம் விளைவித்த இடையில் வந்த எடை இல்லா பாடிக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஒன்றரை கோடி உண்மையான தொண்டர்களே! ஒன்றிணைவோம்! ஒற்றுமையோடு வெற்றி பெறுவோம்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவரது இந்த அறிக்கை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…