மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக ராமேஸ்வரம் துறைமுகத்தில் மக்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களையும், கைது செய்யப்பட்ட மீனவர்களின் விசைப்படகுகளையும் விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரம் துறைமுகத்தில் நேற்று மீனவ சங்க கூட்டம் நடத்தினர். அதில் மீனவர்கள் காலவரற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் படகுகளை நங்கூரம் இட்டு கடலில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் ராமேஸ்வரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…