பாம்புடன் செல்ஃபி எடுக்கும் மோகம் ஆந்திராவில் இளைஞர் ஒருவரின் உயிரை பறித்துள்ளது.
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம், தல்லூர் மண்டலம், போடிகுரபாடு கிராமத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த 32 வயதான போலம்ரெட்டி மணிகண்ட ரெட்டி, நெல்லூர் கந்துகூர் நகர எல்லைக்குட்பட்ட கோவூர் சந்திப்பு அருகே ஜூஸ் கடை நடத்தி வந்தார்.
கடந்த செவ்வாய்கிழமை மாலை, ஜூஸ் கடைக்கு வந்த பாம்பு பிடிப்பவர் வசீகரன், மணிகண்டனிடம் பாம்புகள் இருப்பதாகவும், அவற்றின் கோரைப் பற்கள் அகற்றப்பட்டதால் பாதிப்பில்லாதவை என்றும் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, பாம்புடன் செல்ஃபி எடுக்க அனுமதிக்குமாறு பாம்பு பிடிப்பவரிடம் மணிகண்ட ரெட்டி கோரிக்கை விடுத்தார். பாம்பை கழுத்தில் அணிந்து கொண்டு இளைஞர் செல்ஃபி எடுத்துள்ளார். இருப்பினும், அவர் தனது உடலில் இருந்து பாம்பை எடுக்கும்போது, அது அவரது கையில் கடித்தது.
ஆனால், பாம்பு கடித்தது குறித்து மணிகண்டனிடம் கேட்டபோது, ஒரு நாள் முன்பே அதன் கோரைப் பற்கள் அகற்றப்பட்டதால், இது பாதிப்பில்லாத பாம்பு என்று வசீகரன் உறுதியளித்தார்.
ஆனால் அவர் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அப்பகுதியினர் அவரை ஓங்கோல் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…