Punjab Latest News : பஞ்சாப்பில் பாடகர் சித்து மூஸ் வாலா கொலை சம்பவங்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டம் ஜவஹர் கே கிராமத்தில் வசிக்கும் பாடகர் சித்து மூஸ் வாலா என்பவரை மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில், பாடகர் சித்து மூஸ் வாலா கொலை விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாடகர் சித்து மூஸ் வாலா கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது தான். ஆனால் பஞ்சாபில் இது போன்ற சம்பவங்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று நான் நம்புகிறேன் eன தெரிவித்துள்ளார்.
மேலும், பஞ்சாப் முதல்வர் இந்த விவகாரத்தில் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை விரைவில் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…