சவர்மா சாப்பிட்டு ஏற்பட்ட உயிரிழப்பை தொடர்ந்து தற்போது நூடுல்ஸ் சாப்பிட்டு 2 வயது சிறுவன் உயிரிழந்துள்ளது அனைவரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள தாளக்குடி ஊராட்சி மறுத்தகுடி நகரில் வசித்துவரும் சேகர் - மகாலட்சுமி இவர்களுக்கு 2 வயதில் சாய் தருண் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென சாய் தருண் மயங்கி விழுந்துள்ளார், பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கு காரணமாக
கடந்த வெள்ளிக்கிழமை இரவு மகாலட்சுமி சிறுவனுக்கு நூடுல்ஸ் சமைத்து கொடுத்துள்ளார், பின்னர் அதை பிரிட்ஜில் வைத்துவிட்டு மாரு நாள் காலையில் அதே உணவை கொடுத்துள்ளார். ஏற்கனவே அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு பிரிட்ஜில் வைக்கப்பட்ட நூடுல்ஸை கொடுத்ததால் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் மருத்துவமனைக்கு சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அது முடிந்த பிறகே சிறுவன் உயிரிழந்ததிற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கடைகளில் கெட்டுப்போன இறைச்சியை கொண்டு தயாரிக்கப்பட்ட சவர்மாவை சாப்பிட்டு மாணவி ஒருவர் உயிரிழந்தார். அதே போல் தமிழகத்தில் பல சவர்மாவை சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுவன் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…