Tomato prices : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்திற்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்தது. தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அதிக மழை பெய்யதுள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்க்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை தொடர் உச்சத்தில் இருந்தது.
மேலும், வெங்காயத்தை தவிர அணைத்து காய்கறிகளும் விலை சற்று உயர்வாகவே காணப்படுகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த தக்காளி தற்போது திடீரென விலை உயர்ந்து கிலோ 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறிகள் சந்தையில் தற்போது தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றை விட இன்று தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…