Latest News in Gujarat : குஜராத்தில் ஷாமா பிந்து என்ற பெண் தன்னை தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்துள்ளார்.
உலகில் மனிதர்களாய் பிறந்த அணைவரது வாழ்க்கையிலும் திருமணம் என்பது இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் ஒவ்வொரு நாட்டிலும் திருமண முறைகள் மாறுபட்டாலும், ஆண் பெண் இணைந்து வாழக்கையை தொடங்குவது திருமணமாக அமைகிறது.
இந்நிலையில் குஜராத்தின் பரோடா பகுதியை சேர்ந்த ஷாமா பிந்து என்பவர் சோசியாலஜியில் பட்டப்பட்டிப்பு முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த ஷாமா பிந்து மணமகன் இல்லாமல் தன்னை தானே திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார்.
மேலும், சிறுவயதில் இருந்தே திருமணம் மீது ஆர்வம் இல்லாமல் இருந்த ஷாமாவுக்கு மணமகள் போல அலங்காரம் செய்து கொள்ளும் ஆசை வளர்ந்துள்ளது. இதனால் தன்னை தானே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக தனது பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஷாமா பிந்து தனது பெற்றோர்களை ஒப்புக்கொள்ள வைத்துள்ளார். இந்நிலையில், ஷாமா பிந்துவுக்கு ஜூன் 9ம் தேதி மெஹந்தி நிகழ்ச்சியும், ஜூன் 11ம் தேதி திருமணமும் நடைபெற உள்ளதாக தகவலொ வெளியாகியுள்ளது. மேலும், தேனிலவுக்கு ஷாமா பிந்து கோவாவுக்கு செல்வதாக தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…