அதிமுக அலுவலகத்தில் 2-வது மாடியில் இருந்த முக்கியமான பரிசுப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஒபிஎஸ்- இபிஎஸ் தரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்ப்பட்டது. மேலும் இரு தரப்பினரும் அதிமுக அலுவலகத்தை கலவர பகுதியாக மாற்றியதால் வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதனையடுத்து நேற்றைய தினம் உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து இன்றைய தினம் அதிகாரிகள் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் அலுவலகத்தை ஒப்படைத்தனர். இந்நிலையில் அலுவலகத்தை திறந்து பார்த்த போது, 2-வது மாடியில் இருந்த முக்கியமான பரிசுப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் காணவில்லை என்றும், காணாமல் போன பொருட்கள் அனைத்தும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவுப் பரிசுகளாக கொடுக்கப்பட்டவை என தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரத்தில் காவல்துறையில் புகார் கொடுக்க ஈ.பி.எஸ். தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…