காலநிலை மாற்றத்தால் கொட்டித்தீர்க்கும் கனமழையால் 60 சதவீதம் மன் அரிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாறி வரும் காலநிலையால் பனிப்பாறைகள் உறுகி தீவுகள் மற்றும் கடல் அருகே உள்ள நகரங்கள் மூழ்கும் அபாயம் உள்ளதாக ஆராய்சியாளர்கள் எச்சரித்து வந்தனர். மேலும், பருவம் தப்பி பெய்யும் மழையால் விவசாயம் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என எச்சரித்து வந்தனர்.
இந்தநிலையில் தான் மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதாவது காலநிலை மாற்றத்தால் பெய்யும் கனமழை காரணமாக 68 ஆயிரம் ஏக்கரில் மண் அரிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். போதிய மண் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், ஒரு ஹெக்டரில் 20 முதல் 40 டன் மண் அரிப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…