ரஷ்யா அதிபர் புதினின் ஈரான் பயணம் ரஷ்யா எவ்வளவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை கட்டுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் 150 நாளை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பினருக்கும் கடுமையான சேதங்கள் ஏற்ப்பட்டுள்ளது. ரஷ்யா அதிபர் புதின், ஈரானுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இதனைக்குறிப்பிட்டு பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி , புதினின் ஈரான் பயணம் ரஷ்யா எப்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை உலக நாடுகளுக்கு காட்டியுள்ளதாக தெரிவித்தார்.
நேற்றைய தினம் ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு வந்த புதின், ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கத் தொடங்கிய பிறகு, புதினின் இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…