குழந்தைகளுக்கு மதிய உணவில் முட்டை வழங்குவது தொடர்பாக கர்நாடகத்தில் புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
கர்நாடகவில் பாஜக தலைமையிலான ஆட்சிஉ நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அங்கு ஹிஜாப் எதிராக பள்ளி, கல்லூரிகள் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இந்நிலையில் கர்நாடகவில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க பள்ளிகளில் மதிய உணவில் முட்டை சேர்த்து வழங்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளிகளில் வழங்கப்படும் முட்டை சைவ உணவு உண்பவர்களை புண்படுத்துவதால் பள்ளிகளில் முட்டை வழங்குவதை நிறுத்த வேண்டும் என லிங்காயத்து அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றனர்.
இது தொடர்பாக பேசிய மறைந்த மத்திய அமைச்சர் அனந்த் குமாரின் மனைவி தேஜஸ்வினி அனந்த் குமார்; குழந்தைகளுக்கு மதிய உணவாக முட்டை வழங்குவது ஏன் என்றும், பல சைவ உணவு உண்பவர்கள் முட்டைகளை புண்படுத்துவதாகவும், அனைவருக்கும் நியாயமான விதிமுறைகளை உருவாக்குமாறு மாநில அரசை வலியுறுத்தினார். மேலும், ஊட்டச்சத்துக்கான ஒரே ஆதாரம் முட்டை மட்டும் அல்ல என்றும், ஒவ்வொரு மாணவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வகையில் எங்கள் கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
2021 டிசம்பரில், மதிய உணவில் முட்டையை சேர்க்கும் முடிவை கர்நாடக அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற லிங்காயத் அமைப்புகள் குரல் எழுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…