அமெரிக்க படையெடுப்பில் இருந்து தப்பிக்க அதன் முன்னாள் தலைவர் பயன்படுத்திய டொயோட்டா காரை தலிபான்கள் தற்போது தோண்டி எடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் போராளிகள் 2001 ல் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கப் படைகளால் குறிவைக்கப்பட்டனர். இந்நிலையில் அமெரிக்க படைகளிடம் இருந்து தப்பிப்பதற்காக தலிபான்களின் முன்னாள் தலைவர் முல்லா ஓமர் பயன்படுத்திய டொயோட்டா காரை தலிபான்கள் தோண்டி எடுத்துள்ளனர். இந்த வெள்ளை டொயோட்டா கொரோலா ஜாபுல் மாகாணத்தில் உள்ள ஒரு கிராம தோட்டத்தில் புதைக்கப்பட்டது. இது இன்னும் நல்ல நிலையில் உள்ளது, அதன் முன்பகுதி மட்டும் சற்று சேதமடைந்துள்ளது என்று தலிபான் அமைப்பைச் சேர்ந்த தி ரஹ்மத்துல்லா ஹம்மத் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…