தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் பல பகுதிகளிலும் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. இது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக நல்ல கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.
இதனால் தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும், வடமாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் வெங்காயம் தவிர அணைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
கடந்த மாதத்தில் 10ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் வரத்து குறைந்துள்ளதால் தற்போது தக்காளி விலை வேகமாக உயர்ந்து கிலோ 120 ரூபாயை தொட்டுள்ளது. இந்த தக்காளி விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…