சூர்யா கைது செய்யப்பட்டதைத் தமிழ்நாடு பாஜக வன்மையாகக் கண்டிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி, திருநாவலூர் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் காரில் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கோரி தனியார் பேருந்தை எடுத்து சென்று பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் வந்த நிலையில், திருச்சி சிவா மகன் சூர்யா சிவாவை திருச்சி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக டுவிட் செய்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளைத் தொடுப்பது திமுக அரசுக்குப் புதிதல்ல. அதேபோல் இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும் பாஜக தொண்டனுக்குப் புதிதல்ல. சூர்யா கைது செய்யப்பட்டதைத் தமிழ்நாடு பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. பொய் வழக்குத் தொடுப்பதில் முதல்வர் ஸ்டாலினுக்கும் மம்தா பானர்ஜிக்கும் போட்டி நிலவி வருகிறது’ என, தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…