தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தர்பூசனி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.
கோடைகாலத்தை எதிர்நோக்கி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்று வட்டார விவசாயிகள் தர்பூசனியை பயிரிட்டனர். இங்கு பயிரிடப்படும் தர்பூசனிக்கு டெல்லி, பெங்களூர், வடமாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைப்பதால் விவசாயிகள் ஏற்றுமதி செய்து வந்தனர். இந்நிலையில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் தர்பூசனி பழத்தை வாங்க முன்வரவில்லை என விவசாயிகளிடம் இருந்து 1 ரூபாய்க்கு தர்பூசனி பழங்களை கேட்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் கடும் விலை குறைவு காரணமாக அப்ப்பகுதி விவசாயிகள் யாரும் தர்பூசனி பழத்தை அறுவடை செய்யவில்லை என கூறியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…