தாய்லாந்து சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தமிழர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் பேசு பொருளாகியுள்ளது.
தாய்லாந்து சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அங்குள்ள இந்தியர்களிடம் கலந்துரையாடினார். இந்தியா-தாய்லாந்து உறவு, ஆத்மநிர்பர் பாரத், எளிதாக தொழில் தொடங்குதல், இந்தியப் பல்கலைக்கழகங்கள், ரஷ்யா-உக்ரைன் போரின்போதும் இந்தியா ரஷிய எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட பல கேள்விகள் வெளியுறவு அமைச்சரிடம் கேட்கப்பட்டது.
மேலும், தமிழர் ஒருவர் தமிழ்நாட்டை குறிப்பிட்டு, மத்திய - மாநில அரசுகளின் மோதல் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், நான் வெளிநாட்டில் இருக்கும் போது இந்திய அரசின் உள்விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவிப்பதில்லை என்றும், நீங்கள் இந்தியா வாருங்கள் , அப்போது இது தொடர்பாக விவாதிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…