Priyanka Hochumin September 04, 2023
சிறிய குழந்தைகள் முதல் பட்டதாரிகள் வரையில் ஆசிரியர்கள் கற்பித்தலால் முன்னேற்றம் அடைகிறார்கள். அவர்களின் வளர்ச்சி தான் ஒரு நாட்டின் வளர்ச்சியாகும். இப்படி ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆரம்ப புள்ளியாக இருக்கும் ஆசிரியர்களுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடுவதற்கு காரணம் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை நினைவூட்டும் வகையில் கொண்டாடப்படுகிறது. அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
Nandhinipriya Ganeshan August 22, 2023
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றே இந்த ஓணம் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் மலையாள நாட்காட்டியின்படி சிங்கம் மாதத்தில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. இது ஒரு 10 நாள் திருவிழாவாகும், மேலும் ஒவ்வொரு ஆண்டும் தனது அன்பான மக்களை பார்க்க இந்த நேரத்தில் பூமிக்கு வருகை தரும் அரக்க மன்னன் மகாபலியை வரவேற்கும் விதமாக இப்பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை உங்கள் அன்புக்குரியவர்களுடன் கொண்டாட நீங்கள் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் கொண்டாட்டத்தை இன்னும் மறக்கமுடியாததாக மாற்ற, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய சில மேற்கோள்களை பகிர்ந்துள்ளோம். அனைவருக்கும் வளமான மற்றும் மகிழ்ச்சியான ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்! இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்! ஓணம் திருநாளில், உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறி, வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும். ஓணம் பண்டிகையைப் போல உங்கள் வாழ்க்கை வளமாகவும் பண்டிகையாகவும் இருக்கட்டும். அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்! இந்த ஓணம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் ஏராளமான மகிழ்ச்சியையும் தரும் என்று நம்புகிறேன்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஓணம் வாழ்த்துக்கள்! ஆண்டுக்கு ஒருமுறை ஓணம் பண்டிகையின் போது மக்களைப் பார்க்க வரும் மன்னன் மகாபலியை வண்ண மலர் கோலங்களுடன் மகிழ்ச்சியுடனும் வரவேற்போம். அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்! மலையாள மொழி பேசும் அனைத்து கேரள மக்களுக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்!
Nandhinipriya Ganeshan August 14, 2023
நமது நாட்டின் 77வது சுதந்திரம் நாளை ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்படவுள்ளது. நமது தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் சுதந்திர தின வாழ்த்து கவிதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு பிடித்ததை தேர்த்தெடுத்து அனைவருக்கும் பகிர்ந்து மகிழுங்கள்! போராடி பெற்றுவிட்டோம் சுதந்திரத்தை.. கொண்டாடி மகிழ்வோம் சுதந்திர தினத்தை.. அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு சிறந்த உதாரணமே நம் சுதந்திரம் தான். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! பாருக்குள்ளே நல்ல நாடாம் எங்கள் பாரத நாட்டின் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.. இந்திய தேசத்தின் மீது நேசம் கொண்ட அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! சாதி, மதம், இனம், மொழி இவைகளை கடந்து இந்தியன் என்ற சொல்லால் ஒன்றிணைகிறோம். இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
Nandhinipriya Ganeshan July 28, 2023
இஸ்லாமிய ஆண்டு நாட்காட்டியின் முதல் மாதமாக மொஹரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதாவது, 'இஸ்லாமியர்களின் புத்தாண்டு' ஆகும். இது ரமலான் மாதத்திற்குப் பிறகு இரண்டாவது புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. இந்த அற்புதமான நாளில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்துகளை பகிர்ந்துக் கொள்வதற்காக, சில இனிமையான வாழ்த்து படங்களை தயார் செய்துள்ளோம். அவற்றில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து பகிர்ந்து மகிழுங்கள்!
Nandhinipriya Ganeshan July 09, 2023
நம் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் நம்மோடு தொடர்ந்து இருக்கும் ஒரு உன்னதமான உறவு தான் நட்பு. வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, வெறும் அன்பை மட்டும் வைத்து உருவான இந்த உறவை மேலும் அழகாக்க அழகான நட்பு கவிதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 1 | தகுதியும் தராதரமும் பார்த்து வராத உறவு நட்பு மட்டும்தான். நட்பிற்கு தகுதியும் தராதரமும் பார்ப்பவர் எல்லாம் நட்புக்கு தகுதியற்றவர்கள் என்பது பொருளாகும். 2 | நண்பர்களை கவனமாக தேர்ந்தெடு. உனது வாழ்க்கையையே மாற்றும் உன்னதனமான உறவு அது. 3 | நாம் சந்தோஷமாக இருந்தால் அனைவருக்கும் தெரியும். ஆனால் நாம் சோகமாக இருந்தால் அது நம் நண்பனுக்கு மட்டும் தான் புரியும். 4 | 'கவிதை' என்பது காயம்பட்ட இதயத்திற்கு மருந்து. 'காதல்' என்பது காயப்பட போகிற இதயத்திற்கு விருந்து. நட்பு மட்டுமே மருந்தாகவும்..விருந்தாகவும் இனிக்கும் கரும்பு..! 5 | உரிமை கொள்ள ஆயிரம் உறவுகள் இருந்தாலும், உள்ளதைப் புரிந்து கொள்ள நண்பா உன் ஒரு உறவுபோதுமடா.. 6 | நமக்குள் இருக்கும் திறமைகளை, ரகசியங்களையும் யாரால் கொண்டு வர முடிகிறதோ இல்லையோ நம் நண்பர்களால் கண்டிப்பாக கொண்டு வர முடியும். 7 | அன்னையின் அன்பும், தந்தையின் கண்டிப்புக்களும் ஒன்றாக அமைந்த ஒரு உறவே நட்பின் பொது அடையாளம். அனைத்தும் பொருந்திய உன்னத நட்பு..!
Nandhinipriya Ganeshan July 08, 2023
காதல் என்பது ஒரு அழகான உணர்வு. மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இந்த காதல் எப்படி மலருகிறது என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால், ஒருவருக்குள் இந்த காதல் வந்துவிட்டால், வாழ்க்கையில் அவர் அடையும் மகிழ்ச்சிக்கு ஈடேது. அதே சமயம், எந்த அளவிற்கு மகிழ்ச்சியை கொடுக்க முடியுமோ, அதே அளவிற்கு வலியையும் இந்த காதலால் மட்டுமே கொடுக்க முடியும். அத்தகைய வலிகளை கவிதைகளாக இந்த பதிவில் கொடுத்துள்ளோம். 1. உடலுக்கு உயிர் கூட சுமைதான் நாம் உயிராக நினைக்கும் ஓர் உயிர் நம்மை மறந்து போகும் போது.. 2. அனைவரும் அருகில் இருந்தும் அனாதைபோல் உணர வைக்கின்றது நாம் நேசித்தவரின் பிரிவு! 3. அன்பு ஒருபோதும் தோற்பதில்லை அதிகமாக அன்பு வைத்தவர்கள் தான் தோற்கடிக்கப்படுகிறார்.. 4. போகும்போதே நீயே என்னைக் கொன்று போயிருக்கலாம் உன் நினைவுகள் இப்பொழுது என்னை கொஞ்சம் கொஞ்சமாய் கொள்வதைக் காட்டிலும்.. 5. நேற்றுவரை முக்கியமாக இருந்த நாம் நாளை யாரோவாக உணரப்படுவோம் என்று அறிந்த நொடி அமைதியாக விலகிவிடுவது நல்லது...
Nandhinipriya Ganeshan July 06, 2023
நண்பர்களைக் கொண்டாட ஒரு நாள் வேண்டுமா என்ன? ஒவ்வொரு நாளும் நாம் கொண்டாட வேண்டிய உறவு தான் நட்பு. இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை 'நண்பர்கள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில், உங்களுக்கு உங்க நண்பர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை வாழ்த்துக்களின் மூலம் தெரியப்படுத்துங்கள். 1 | இந்த உலகில் இரத்த பந்தம் இல்லாமல் நமக்காக துடிக்கும் ஒரே உறவு நண்பர்கள்தான். அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்! 2 | தோள் கொடுக்க தோழனும் தோள் சாய தோழியும் கிடைத்தால் அவர்கள் கூட தாய் தந்தை தான்… Happy Friendship Day..!! 3 | கஷ்டம் வந்தால் கடவுளிடம் செல்பவர்களை விட நண்பர்களிடம் செல்பவர்கள் தான் அதிகம்.. ஏனென்றால், எந்த உறவு கைவிட்டாலும் அந்த உறவு நம்மை எப்போதும் கைவிடாது.. அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்! 4 | நான் சிரித்தால் என் மகிழ்ச்சியிலும் நான் அழுதால் என் கண்ணீரிலும் எனக்காய் நிற்பவன் என் நண்பனே! Happy Friendship Day.. 5 | யாரிடம் நீ நீயாக இருக்க முடிகிறதோ அவன்தான் உன் நண்பன்… ஹாப்பி ஃப்ரண்ட்ஷிப் டே நண்பா! 6 | எங்கோ பிறந்து இதயத்தில் இணைந்து வாழ்வில் பயணிக்கும் உன்னத உறவு நட்பு மட்டுமே! இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.. 7 | வாழ்வில்.. தடுமாறும் போது தாங்கி பிடிப்பவனும்.. தடம் மாறும் போது தட்டி கேட்பவளும் தான்.. உண்மையான தோழன் / தோழி! Happy Friendship Day..
Nandhinipriya Ganeshan July 06, 2023
காதல் என்பது ஒரு அழகான உணர்வு. மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இந்த காதல் எப்படி மலருகிறது என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால், ஒருவருக்குள் இந்த காதல் வந்துவிட்டால், வாழ்க்கையில் அவர் அடையும் மகிழ்ச்சிக்கு ஈடேது. அதே சமயம், எந்த அளவிற்கு மகிழ்ச்சியை கொடுக்க முடியுமோ, அதே அளவிற்கு வலியையும் இந்த காதலால் மட்டுமே கொடுக்க முடியும். அத்தகைய வலிகளை கவிதைகளாக இந்த பதிவில் கொடுத்துள்ளோம்.
Priyanka Hochumin July 05, 2023
இந்த உலகத்தில் வாழும் அனைவருமே வாழ்க்கையில் ஏதேனும் ஓர் தருணத்தில் துவண்டு போகும் சூழல் ஏற்படும். அந்த தருணத்தில் நம்முடன் அனைவரும் இருந்தாலும், நமக்காக யாருமே இல்லாதது போல் ஒரு உணர்வு ஏற்படும். அதில் இருந்து மீண்டு வந்து வாழ்க்கையை எதிர்கொள்பவர்கள் மிகவும் குறைவு. மற்றவர்கள் அந்த சிரமத்தை நினைத்துக்கொண்டே தங்களின் அழகான வாழ்க்கையை சீரழித்துக் கொள்வார்கள். அப்படியானவர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பல மேற்கோள்கள் உள்ளன. அதில் சிலவற்றை இந்த பதிவில் பகிர்ந்துள்ளோம். அதனை நீங்கள் மட்டும் படித்து பயன்பெறாமல், உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் அதனை அனுப்பி வாழ்க்கையை நம்பிக்கையுடன் வாழ தொடங்குங்கள்.
Nandhinipriya Ganeshan July 04, 2023
வணக்கம் நண்பர்களே! நம்மில் பலருக்கும் தினமும் நண்பர் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் காலை நேரத்தில் காலை வாழ்த்துக்கள் அனுப்பும் பழக்கம் இருக்கும். அது உண்மையில் நல்ல பழக்கம் தான். ஏனென்றால், நாம் மற்றவர்களுக்கு அனுப்பும் இந்த வாழ்த்துக்கள் அவர்களுடைய நாளை மிகவும் இனிமையானதாக மாற்றும். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் தொடங்கிட உத்வேகம் அளிக்கிறது. இந்த பதிவில் காலை வணக்கம் படங்களோடு அற்புதமான கவிதைகளும் உள்ளன. அவற்றில் பிடித்த படங்களை தேர்ந்தெடுத்து மற்றவர்களுக்கு பகிர்ந்து நாளை மகிழ்ச்சியுடன் தொடங்குவோம்.. அனைவருக்கும் அழகான வணக்கம்...!!!